உத்திரபிரதேச மாநிலத்தில் யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹரித்வாரில் இருந்து 17 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் வியாழக்கிழமை காலை கஜ்ரௌலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்கள் இதுவரை அடையாளம் காணவில்லை எனவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.